Saturday, September 21, 2013

கொங்கப் பரை சாம்பான்கள்

கொங்கள இயற்றமிழ்/சேர தேச பிராகிருதப் பெயர்:  கொங்கப்
பரை சாம்பான்கள் (பெருந்தாலிப் பரையர்)

தொல்காப்பிய மரபுப் பெயர்: கங்கை குல வேளாண் மாந்தரில் மருத நிலக் கடைசியர்

மனுநீதி மரபுப் பெயர்:
கங்கா குல பிரதிலோம உற்பத்தி சாம்பவ சூத்ர: 
(பஞ்சமர்/ஐந்தாம் வர்ணம் என்ற பிரிவு அசுர நாத்திக சகர Illuminatiயின் புனை கதை. நாவிதர்,வண்ணார் அனுலோமத்தால் நம் கங்கை குல சமூகத் தேவைகளுக்காக உருவாக்கப்பட்டது போல, பள்ளர்,பறையர் பிரதிலோமத்தால் நம் குலத்தின் தேவைகளுக்காக உருவாக்கப்பட்டவர்கள். வெள்ளாளருக்கு வலங்கை வெள்ளாஞ் செட்டியுடன் அனுலோம பிள்ளைகள்: நாவிதர், வலங்கை பிரதிலோம பிள்ளைகள்: பறையர் )  

கொங்கதேசத்தின் பாரம்பரிய  கிராம வெளித்துறை அதிகாரிகளாகவும் (தோட்டி-tax collector, village military band and public relations officer):

 சுடு சாம்பான் (Funeral Director and Kapala Salvation giver ஆகிய பாரம்பரிய பதவிகளிலும் இருந்துள்ளனர் (1800-1986 வரை படிப்படியாக அழிக்கப்பட்ட நம் சேர மன்னர்தம் சங்ககால முறை)

கொள்ளிக்கு வைக்கும் நெருப்பு சட்டியை பிற தேசங்களில் முத்த மகன் எடுத்து செல்வான். ஆனால் கொங்க தேசத்து வெள்ளாளர்களின் அக்கினியை கோங்க சாம்பான் மட்டுமே எடுத்து செல்ல வேண்டும் என்பது விதி. 
ஒரு சம்பானிடம் கேட்கையில், அவர் "வெள்ளாளர்களுக்கு நாங்கள் வலங்கை பிள்ளை முறை, எனவே நாங்கள்தான் மகன் முறையில் இருந்து செய்கிறோம்" என்றார். 
மேலும், Funeral directorரென்பதற்கு மேல் சுடு சாம்புவனது பணி! அது மனிதனின் பிறவிப்பயனான பிறப்பற்ற நிலையை அடைதல். அதாவது யோகிகளைத்தவிர சாமானிய மனிதர்கள் காலமானால், ஆன்மா சகஸ்ரார சக்கரமான ஆத்ம சிவ லிங்கம் (pineal gland) தன்னிலிருந்து மனத்தை நோக்கும்.



மூளைக்குள்ளிருக்கும் ஆன்ம சிவ லிங்கத்தின் தோற்றம்:


மோட்சத்திற்கு வழியாகும் இத்தெய்வீகத்தொண்டினைச்செய்பவர்களை இழிவான நிலைக்கு இலுமினாடி துஷ்பிரச்சாரம் மூலம் தள்ளி நம்மை மீள முடியாத கொடிய நரக நிலைக்கு தள்ளுகின்றனர். விழித்துக்கொள்வோம், விடுதலையடைவோம். மோட்சம்தரும் கொங்கப்பரை கங்கைகுல வலங்கைப்பிள்ளைதான் இறந்தவனுக்குத் தலைமகன், சாம்புவன் என்பதன் சூட்சுமம் இதுதான். பரையரது இசைதான், ஆன்ம சிவ லிங்கத்தைத்தட்டி எழுப்பும் ஆன்ம உடுக்கை இசையான சாம வேதத்தின் அடிப்படை இசை! 

முறையான சுடு வித்தை தெரிந்த வயோதிக சுடு சாம்புவரிடமிருந்து கேட்கையிலும், ஞான, மருத்துவ புத்தகங்களைப் படிக்கையிலும், நெற்றிப்பொட்டான மூன்றாம் கண்ணான இது, சவத்தை தகனம் செய்கையில், உடல் எழுந்தமரும் நிலைக்கடுத்தபடியாக, கபாலம் வெடிக்கும். அப்பொழுது ஆன்ம மனதிலிருக்கும் ஆன்மா விடுதலையடையும். வேத மார்க்கத்தின் ஆணிவேரான பிரம்ம சூத்திர உரையை ஆதி சங்கரர் காசி நகர சாம்புவனிடமிடம் லௌகிக anatomyயை சிவனருளால் கற்றபின் எழுதினார் என்பதே சாட்சி!

"சாம்பவ" அதாவது சம்பு என்ற ஈசனது ஆன்ம விடுதலையளிக்கும் வேலையைச்செய்வதால், சாம்புவ என்ற யோக நிலையை குறிக்கும் பட்டம் அளிக்கப்பட்டுள்ளது என்று எனக்கு புரிந்தது! இதனை செய்யாத மனிதன், இறை நிலையை அடையவிலாது. ஞான வெட்டியான் என்பதும் இதுதான்! பிரம்ம ஞானத்தை அளிப்பவர். உட்புறச்சுடலையான கபாலத்தினுள்ளிருப்பதை (அகம்), புறச்சுடுகாட்டில் (பரம்) ஐக்கியம் செய்யும் அற்புதக்கலை. 

யோகிகளைத்தவிர பிறரை புதைக்கலாகாது. பிற மாநிலத்தார் இதனை சரியாக செய்யினும், கொங்கதேசத்தவர் எலெக்ட்ரிக்
கிரிமேஷன், புதைத்தலென அந்நிய வழிகளால் முன்னோரான தென்புலத்தாரது அந்திம சம்ஸ்காரத்தில் தவறி வருகின்றனர். இது கொடிய நிலைக்கு நம்மைத் தள்ளியுள்ளது கண்கூடு.


துளு நாட்டிலிருந்து ஆதொண்டனால் கொங்கர்க்கு வர்த்தியாகக் குடியேற்றப்பட்ட தொண்டை மண்டல துளுவ வேளாளர்க்கு இடங்கை வன்னியர் எடுப்பதால், அவர்களுக்கு "அக்கினி சட்டி, வன்னியர்" என்ற பெயர். இதனாலேயே "பள்ளியும் ஒன்னு, பரையும் ஒன்னு" என்கிறது கன்னிவாடி பட்டயம்.

நாத்திக இலுமினாட்டி அடியாள் ஆங்கிலேய சர்க்கார் இப்பதவிகளை பறித்து எழ்மையை உண்டாக்கி இச்சமூகத்தினை கேவலப்படுத்தினர், அதன் மறுபதிப்பான இன்றைய காமன்வெல்த்  இண்டியன் டொமினியன் சர்க்காரும் Manual scavenger எனும் கோஷா/பர்தாவினருக்கு/Veil மலமள்ளும் துருக்க/ஐரோப்பிய கொடூரத்தை செய்ய வைக்கிறது. ஆனால் கொங்க பறையர் இதனை செய்வதில்லை.

நமது நாட்டு மனுநீதி முதல் வாஸ்து சாஸ்திரம் வரை "வெளிக்கு" அதாவது குடியிருப்பிலிருந்து கவண்கல் விழும் தூரத்தில் மந்தைவெளியில்தான் குழியிட்டு மூட வேண்டும். குடியிருப்பு, நீர்நிலைகள் அருகில் போகக்கூடாதென்கிறது. அவ்வாறே சங்கராச்சாரியர் முதல் சாம்புவர் வரை போனோம், போகிறோம்.

பார்க்க: 

மனிதர்கள் மலமள்ள கூடாதென நீலீக்கண்ணீர் வடித்துக்கொண்டேயிருக்கிறது Illuminati court. துப்புரவு பணியென்று சுவச்ச பாரத் கக்கூஸ் கட்டிக்கொண்டு கழுவவிட்டுக்கொண்டேயிருப்பார்கள்! காந்தி கூட கக்கூஸை தர்ம விரோதம், நீர் மாசுபாடெனயெதிர்த்தாரே! காந்தி கண்ணாடி படம் போட்டே சுவச்ச பாரத் திட்டம்!


ஆனால் காணி கோயில்களில் தேர்களில் சாமி வெளியே செல்கையில் பாரம்பரியமாக  முதல் திருநீர் "சாம்பான் திருநீர்" என 
நம் சாம்பவர்களுக்கே முதலில் வழக்கப்படுகிறது. பாருங்கள் மாறுபாட்டை!

கொங்க அனைத்து குடிகள் குலதெய்வங்களாக விளங்கும் குப்பண்ண சாமி மற்றும் வீரமலை சாம்பான் ஆகியோர் பரை சாம்பான்களே. சரித்திர நாயகர்களாக வாழ்வாங்கு வாழ்ந்து வானுறை தெய்வத்துள் வைக்கப்பட்ட தோட்டிகள்.



வீரமலை சாம்புவன் ஞாபகார்த்தமாக அவர் வாரிசுக்கு போடப்படும் சாம்புவன் பூசை



கொங்கப்பரையரான சங்கிடும் (சங்கு) பறையரான வீரமலை சாம்புவன் அண்ணாமார்களது தோட்டி மந்திரி என்கின்றன பிரெண்டா பெக் பதிவு செய்துள்ள எரிசனம்பட்டி ராமசாமி (1963) , பேராசிரியர் மு.சற்குணவதி பதிப்பித்துள்ள கணியூர் நடுத்தெரு கன்னியம்மாள் உடுக்கடியில் அண்ணமார் கதைபாடல் (2000) அண்ணமார் சுவாமி கதைகள்.

மேலும் வெள்ளிவளநாடு தாமரை நாச்சி பள்ளிக்கூடத்தில் அவர்கள் நாட்டின் தொட்டி சாம்புவனோடு சமமாகப் படித்தனர் என்பதற்கு ஆதாரம்:






குன்னுடையாக் கவுண்டன் வலங்கைப் பிள்ளையான சோளத்தோட்டிக்கு சிதம்பரேஶ்வரர் அருளால் மாயவர் திட்டப்படி பிறந்த நகுலன் அவதாரமான  வீரமலை சம்புவன் காளைமேல் அமர்ந்து முரசடிக்கும் காட்சி (இன்றும் பரையர் சமூக வாரிசே செய்கிறார்) . பின்னால் தர்மர், பீமர் அவதாரங்களான   அண்ணமார் வருதல் (படுகளம் , வீரப்பூர் மற்றும் பல ஊர்களிலும் ). மாலை போட்டு வணங்கும் கொங்க வெள்ளாளர்கள், கொங்க உப்பிலியர்கள், கொங்க முடவாண்டிகள், கொங்க குலாலர்கள், கம்பளத்து நாயக்கர்கள், முத்துராசாக்கள் மற்றும் பிறர். 


குப்பண்ண சாமியை கொங்க குலகுரு மங்கலப்பட்டி மடாதிபதி மூலம் குருக்களைக் கொண்டு குலதெய்வமாக வணங்கும் கொங்க சிவ பிராமணர், வெள்ளாளர்கள், கைக்கோலர்கள், வேட்டுவர்கள், சாம்பான்கள். அனைத்து ஜாதியினரும் குப்பு, குப்பணா என்று பெயர் வைக்கின்றனர். (முத்தூர் மற்றும் பல ஊர்கள்) 

வெங்கல நாட்டு சம்புவர் பூசாரிகளுக்கு பாரம்பரியமாக வெண்ணைமலை ஆதிசைவ சிவாச்சாரியார்கள் பூசாரியாக உபதேசம் பட்டம் வைக்கின்றனர். இதுபோலவே பிற நாடுகளிலிலும் உண்டு. இதிலிருந்து  ஆரியர் திராவிடர்,  சிறுதெய்வம் போன்ற மிஷனரி புரட்டுகள் புரியும். சாம்புவர் மேலும் பட்டி காவல்காரர்களாக இருந்து கால்நடை பாராமரிப்பு, வைத்தியம் செய்கின்றனர். இதனால் நமது பட்டி நாய்க்கே "பரையா டாக், பரையர் நாய்" என்று வேள்ளையர் பெயர் வைத்தனர்:
https://en.wikipedia.org/wiki/Pariah_dog

அதே போன்று   நாட்டுக்குதிரை (பழனி மட்டம்), நாட்டு மாடு (கொங்க, காங்கயம்)  பாதுகாத்து வளர்ப்பதில் சிறந்தவர்களாக இருந்துள்ளனர். கொங்க  வெள்ளாளர் சீர்களில் மாப்பிள்ளைக்குக் குதிரை  பிடித்தல் காணி சாம்பான் உரிமையாகும். சிறந்த Animal Handlersஆக இருந்துள்ளனர். English thoroughbred, Jersey, Holstein Fresian, சீமை குதிரை, மாடு, நாயினங்களைத் திணித்தும், பட்டிக்காவல் முறையினை அழித்தும்
பாரம்பரிய தொழில்கள் முடிக்கப்பட்டன. 

தற்பொழுது வரை பரையர்களில் பெரியவர்கள் பசு மாடு சாப்பிடுவதில்லை. அதேபோல விருத்திக்கு பயன்படும் காளைகளை சாப்பிடுவதில்லை. இறந்த எருதை உண்பதுகூட துருக்கர், வெள்ளையர் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட பஞ்சம், வறுமைக் கொடுமையை சமாளிக்க வாத்தியம் செய்ய தோலுரிக்கும் மீதத்தை சாப்பிடும் அவலம்தான் என்கின்றனர். செத்த மாட்டுக்கறி பரம்பரையாக சாப்பிடுபவர்கள் கொங்கின் மலைகளில் "புலையர்" வனவாசிகளே. வால்பாறை, நீலகிரி போன்ற தேயிலை தோட்டத்திற்கு சென்றபோது, வெள்ளையருக்கு மாட்டுக்கறி சமையல் செய்ய யாரும் முன்வராத போது, கொத்தடிமைகளான பரையர்களை செய்ய வைக்கையில்தான், உயிருள்ள மாட்டை அடிக்கும் பழக்கம் வந்துள்ளது (1860களுக்குப்பின்னர்). அதனால்தான் பரையர் கோயில், சடங்குகளில் மாடு வெட்டும் பழக்கமில்லாததை கவனிக்க வேண்டுமென்றார் பெரியவர்!



தீரத்தமலை தலையாரி போன்றவர்களை நீக்கி Illuminati சொல்லும் அநியாயங்களை செய்யத்தான் நவீன helper, police, vetrinary department போன்றவை.

Protected trade முறையிலான பரையர்களது மேற்கண்ட பாரம்பரிய குலத்தொழில்கள் அழிப்பு வழியில் வறுமையும், மேலும் Abkari actடென்ற சட்டத்தின்மூலம் அனைவரும் அனைத்து நேரங்களிலும் அளவில்லாமல் குடிக்கலாம், என்ற வகையில் அதுவரை கூலியாட்களுக்குக் களைப்பைப் போக்கி சத்து தர இலவசமாக இரவு வழங்கப்பட்ட கள்ளை capitalist வர்த்தக விலைபொருளாக்கிய Illuminati சர்க்கார். மேலும் சாராயம், கஞ்சா, அபின் கடைகளையும் வைத்து பரையர்கள் போன்ற protected trade வரியற்ற heritage community கடன்காரனாக்கியது. தற்போது வரை TASMAC நீள்கிறது. பண்டமாற்று, உழைப்பு மாற்று மூலமே பெரும்பங்கு வாழப்பழகியிருந்த dedicated communityயான பரையர்களுக்கு அடுத்த அடி பணமயமாக்கல். அதன்பின் பண வட்டிக்கொடுமை. Classசெனும் வர்க்கபேதக் கொடுமை ஜாதிக்குள்ளும் வெளியிலும் சமூகத்தை divide and rule பிரித்தாளும் சூழ்ச்சியால் பிளந்தெறிந்தது.

வர்களது வரியில்லா மானிய பூமிகளுக்கு Illuminati French East India Company கூலி திப்பு சுல்தான் Inam Zapti Firman மற்றும் Illuminati  வெள்ளையர் சர்க்கார்  வரி (Uniform taxation) விதிக்கப்பட்டு, கட்ட  முடியாதவர்களது பூமிகள் "பரையங்காடு, பரையந்தோட்டமென" ஊருக்கு ஊர் ஏலம் விடப்பட்டதை இன்றும் அனைத்து பகுதிகளிலும் பார்க்கிறோம்.

சோழன் பூர்வ பட்டயம் சொல்லும் கொங்கதேச பூர்வீக
வரிறை. உழுதகுடிக்கு (குடியான வெள்ளாளர் எனும் வரிசையாளர்) மட்டுமே வரி. பிறருக்கு மானியம்.

பெரியதனக்காரன் முதலான பரையர் ஜாதி நீதி அமைப்பு வேரறுக்கப்பட்டது, நாடு பஞ்சாயத்துகளும் நிறுத்தப்பட்டு, கோவை, சேலத்தில் பிரிமேசானிய காலேஜியத்தின் பிடியில்! நீதி அழிக்கப்பட்டது. புலவனார்கள் நடத்தி வந்த திண்ணைப்பள்ளிக்கூடங்கள் நகருக்கு மாற்றப்பட்டன. கலைகளிலும், சங்கீதத்திலும் சிறந்திருந்த பரையர்கள் கல்வி கற்க வழியின்றி தாழ்ந்தனர்.

கிறிஸ்தவத்திற்கு மாறினால் வரிவிலக்கு, பூமிகள் (Settlement), கொடூர மலைத் தோட்டங்களில் அடிமை வேலை. நாலு பேர் பெற்றுக்கொண்டவர்கள், தாங்கள் சுரண்டப்படுவதை அறியாமல், நீக்ரோக்கள் போன்று வேரறுக்கப்பட்டதை அறியாமல், நமக்கென்ன நன்றாகத்தானிருக்கிறோாமென்ற நிலை. 

அமெரிக்க அடிமை வம்ச நீக்ரோ கருப்பின ஆப்ரிக்கர்கள் வெள்ளையர்களை மீட்டெடுத்த தெய்வமாகப்பார்ப்பது போலத்தான்!

இப்படியாக  பெருவாரியாக  அழித்தொழிக்கப்பட்டனர்.  பரம்பரை தொட்டி ஆகிய பிற பதவிகளும்  ஒழிக்கப்பட்டு. பெருமை வாய்ந்த இக்குடி மத, பொருளாதார, கலாச்சார, கல்விகளில் தாழ்த்தப்பட்டது. 

மேலும் ராயலசீமை அகதிகளான தொட்டிய மாதாரிகள் கொங்கத்தில் கட்டுப்பெண் ஜாதியாக வந்ததால் பெருகியிருந்தனர். 
விதவை நோன்பு, வீரமா சதியென்ற வீரமாத்தி  உடன்கட்டையேறும் கற்பு நெறி சார்ந்த சமூகமாதலால் கொங்கப்பரையர் 1600 முதலே குறைந்திருந்தனர். மொரசு மாதிகரென்ற ஹளேகன்னடம் பேசும் மாதிகரும் கொங்கில் மேற்கூறிய காரணத்தால் குறைந்துவிட்டனரென்பது குறிப்பிடத்தக்கது.

காமன்வெல்த் சர்க்கார் அனைவரையும் "SC"யென்று வகுக்கிறது! பல்கிய அகதிகளுக்கும், குறைந்துவிட்ட பூர்வ குடிகளான கொங்கப்பரையர், கொங்கப்பள்ளருக்கு கோட்டா கொடுக்காமல் கொடுமையைத் தொடர்கிறது. தனித்தொகுதிகளிலும் அகதிகள்தான் ஜனத்தொகையால் நிறுத்தப்படுகின்றனர்! அதுமட்டுமல்லாது அருந்ததியர்  உள்ளொதுக்கீடு தங்கள் MLA, MP பலத்தை வைத்துப்பெற்றுள்ளனர். பற்றாக்குறைக்கு தமிழகத்திலிருந்துவரும் "தலித்" தலைவர்கள், புரிந்துகொள்ளாது, கொங்கப் பூர்வகுடிகளுக்குள் பகையைத்தூண்டி குழப்பி அகதிகளை வோட்டுப்பொறுக்க முயல்கின்றனர். அதுமட்டுமின்றி பாரத காமன்வெல்த் அடிமை சர்க்காரும், தமிழ்நாட்டு RSSகாரர்களும் கிறிஸ்தவர், ஹிந்துவென்று குடும்பங்களைப் பிரித்து, பாதிக்கு மேற்பட்ட கொங்கப்பரையருக்குக் கோட்டா கிடைக்கமல் செய்கின்றனர்.

பலயிடங்களில் கோஷா (பர்தா) இஸ்லாமிய பெண்களது "ஹாரெம் பர்தா கோஷா கக்கூஸ்" என்று வீட்டுக்குள்ளே சுவற்றுக்கு வெளியிலிருந்து விடப்படும் முறத்தில் மலம் கழிப்பு முறையின் (எடுப்பு கக்கூஸ்) கழிவுகளை அகற்ற  பஹமணி சுல்தான்களிடம் சரணடைந்த தெலுங்க தொட்டிய மாதாரி/மாதிகாக்கள் தாய்நாடான ராயலசீமையில் ஏழ்மையினால் வற்புறுத்தப்பட்டனர்.


மேல்: முஸ்லிம் யூதமுறை சகோதரத்துவம். ஜாதிகூடயில்லாத அரபி, பார்சி, துருக்க, படானி கொள்ளையருக்கு மதுரை வீரன் குழந்தைகளைக் கக்கூஸ் அள்ள வைத்தல்
நன்றி: பாகிஸ்தானிய முஸ்லிம் தளம் (அங்கிருந்தே தோற்கடிக்கப்பட்ட ஹிந்து மாதிகாக்களை சகோதரத்துவ ஜாதிவெறி முஸ்லிம்கள் நடத்தும் அடிமை முறை!) 

வீறு கொண்டவர்கள் ராயலசீமை குத்தி, கதிரி, திருப்பதி, அஹோபிலம் போன்ற பகுதிகளிலிருந்து தப்பி கொங்கதேசம் அண்டி, கொங்கரால் பஹமணிகள் துரத்தபட கூட நின்றனர் (விஜயநகர திருமலை நாயக்கர்,
மதுரை வீரன் காலம் 1623-1659 CE) அதனால்தான் அனைத்து செல்லாண்டியம்மன் கோயில்களிலும் (கட்டுரையாசிரியர் குலதெய்வமுள்ளிட்ட)
மதுரை வீரன் குலதெய்வங்களோடு வைக்கப்பட்டு வணங்கப்படுகிறான்
.மதுரை வீரன் கதை: http://www.tamilvu.org/ta/library-lB202-html-lB202cnt-152535

மதுக்கரை செல்லாண்டியம்மன் மூல சன்னிதியில்  மதுரை வீரன் பரிவார தெய்வமாக 

கொங்கதேச நாட்டார் சபை பழைய கன்னட மாதிகாக்களுக்கு (மொரசு மாதிகா) போலவே கம்பள, தொட்டிய பாளையப்பட்டுகளில் நாயக்க பட்டக்காரர்கள் "சக்கிலிகாடு, சக்கிலி தோட்டமென" காணலாம்

Illuminati ஆங்கில துறைகள் Settlement பரையர்களை தங்கள் Illuminati கண்டுபிடிப்பான Dry closet அள்ள கட்டாயப்படுத்திப் பயன்படுத்தினர். காட்டையும் ஏலம் விட்டு நாட்டையும் விட்டு அகதிகளாக்கி, தாய் வழிபாட்டையும் மாற்றி, கக்கூஸ் கழுவப்போட்ட இவர்கள்தான் பரையர் சமூகத்தை விடுவித்த விடிவெள்ளிகள்?!



மேல்: Illuminati கிறிஸ்தவ சகோதரத்துவ கக்கூஸ். அதாவது ஜாதி கூடயில்லாத, மலங்கழுவத்தெரியாத திருட்டு அடியாளுக்கு Settlement பரையரினியலாமையைப் பயன்படுத்தல்!

இன்னும் பல கொடூரங்கள் (பலாத்காரம் போன்ற) அரங்கேறின.  இதனை ஒட்டி சமீபத்தில் வந்த ஒரு திரைப்படம், பரதேசி





பரையர்களில் கொங்க 24 நாடுகள்:
  1. பூந்துறை நாடு
  2. காங்கய நாடு
  3. பொன்குழிக்க (பொங்கலூர்) நாடு
  4. வாரக்க நாடு
  5. வையாபுரி நாடு
  6. மண நாடு
  7. ஆறை நாடு
  8. அரைய நாடு
  9. அண்ட (சேவக) நாடு
  10. வடகரை நாடு
  11. பருத்திப்பள்ளி நாடு
  12. நல்லுருக்கா நாடு
  13. கிழங்கு நாடு
  14. காஞ்சிக்கோயில் நாடு
  15. ஒடுவங்க நாடு
  16. குறுப்பு நாடு
  17. வாழவந்தி நாடு
  18. ஆனைமலை நாடு
  19. தட்டய நாடு
  20. பொங்குலுர்க்க நாடு
  21. எழுகரை நாடு
  22. எடைபயன் நாடு
  23. வேங்கல நாடு
  24. கொண்ட நாடு
ஜாதிகள் அமைப்பு முறை:

பரையர்கள் புரோகிதர்: வள்ளுவர்

18 வகை  பரை சாம்பான் ஜாதியினர்:

1.சங்குப்பரை சாம்பான்
2.கொங்கப்பரை சாம்பான்
3.சோழியப்பரை சாம்பான்
4.தாதப்பரை சாம்பான்
5.தங்களாம்பரை சாம்பான்
6.மொட்டப்பரை சாம்பான்
7.கட்டிப்பரை சாம்பான்
8.மொறசப்பரை சாம்பான்
9.அச்சாலிப்பரை சாம்பான்
10.துச்சாலிப்பரை சாம்பான்
11.அல்லியம்பரை சாம்பான்
12.வடுகப்பரை சாம்பான்
13.செம்பாசிகட்டிப்பரை சாம்பான்
14.கன்னடியப்பரை சாம்பான்
15.தவளைதின்னும்பரை சாம்பான்
16.சாம்பப்பரை சாம்பான்
17.குப்பப்பரை சாம்பான்
18.அப்பப்பரை சாம்பான்

பரை கம்மாளர்
பரை சாம்பான் நாவிதன், 
பரை சாம்பான் வண்ணான்

பதினெட்டு பரையர் ஜாதி பரையர் ஜாதிப் பிள்ளைகள்: வலங்கை  நட்டுவன் (பரையர்தம் நாடகத்தமிழ்க் கலைஞர்கள்!)

கொங்க பரையர்கள் பற்றி வெள்ளையர் 1918 சேலம் ஜில்லா கெஜட்டியரில்:





பரையர்கள் பற்றி எட்கர் தர்ஸ்டன் தென்னிந்திய சாதிகள் புத்தகத்தில்:
https://archive.org/stream/castestribesofso06thuriala#page/76/mode/2up

குலகுரு குழந்தையானந்த மடங்கள்:





     1. கள்ளகவுண்டம்பாளையம் குழந்தையானந்த குருமடத்தின் குலகுரு
                         காசிவாசி ஆனந்த குழந்தையானந்த சுவாமிகள் 








2. அந்தியூர் குள்ளவீரம்பாளையம் மடம் 
 ஸ்ரீமது  தொந்தி குழந்தையானந்த குருசுவாமிகள் 



3. நடந்தை மடம்
 ஸ்ரீமது குழந்தையானந்த குருசுவாமிகள் 



கொங்க 24 நாட்டு 18 வகை  பரை சாம்பான் ஜாதியினர் பதினெட்டு
 பரையர் ஜாதி பிள்ளைகள்: வலங்கை  நட்டுவனுக்கு கொடுத்த பட்டயத்திலிருந்த நகல் எழுதியது (மூலத்தை  தாசில்தார் கைபற்றி எடுத்து சென்று அழித்து விட்டாராம்):


பட்டயம்:

































Friday, September 20, 2013

தீர்த்தமலை தலையாரி

கிராமங்களின் ஆணிவேராய் இருந்த தீர்த்தமலை தலையாரி போன்றவர்களை நீக்கி Illuminati சொல்லும் அநியாயங்களை செய்து நம் உண்மையான பாரதத்தை அழிக்கத்தான்் நவீன police, veterinary, animal husbandry department போன்றவை. பென்ஷன் என்ற சொற்பத்தொகையோடு இந்தப்பாரம்பரியம் முடிந்தது. மகன் அடிமையாக வேன் தொழில் - இதுதான் "தலித்" விடுதலையாம்! 2020இல் பாரதம் அழிந்து "இண்டியாவாக"
பாரத கிராமம் என்ற அழகிய ஆலமரத்தின் கண்ணுக்குத்தெரியாத கடைசி ஆணிவேர்களும் நாத்திக இலுமினாடி மாயை வியாதியால் இற்றுக்கொண்டிருக்கின்றன!

Thursday, September 19, 2013

ஆன்ம லிங்கம் சகஸ்ரார சக்கரம்

இவ்வான்ம சிவ லிங்கத்திற்கு (சகஸ்ரார சக்கரம் இயங்குமிடம், மூன்றாம் மனக்கண், Pineal gland) விடுதலை அளிப்பதே கொங்கப்பரை சாம்புவரின் சிவப்பணி. அதனை activate செய்வதே சிவனது உடுக்கை சாம வேத இசையான பறையர் இசை. மூன்றாம் படம் ஆஞா சக்கரமான ஆன்ம லிங்கத்தின் ஆவுடையார் (Pitutary gland) மூளை மாயையான உலகை அறியும் மாயவர் (விஷ்ணு) - உள்ளம் பெருங்கோயில்...சீவன் சிவலிங்கம்)


பெளத்த  இலுமினாட்டி உங்கள் ஆன்ம லிங்கத்தைக் கொல்ல  சதி :